Monday, November 9, 2009

ஒரு நாள் என்பது!!!


ஒரு நாள் என்பது எத்தனை மணி நேரம் என்பதே மறந்து போகும் போல இருக்கிறது. நிகழ் தூங்கி எந்திரிக்கும் நேரம் தான் காலை. அது சாயங்காலம் நான்கு மணியாக இருந்தாலும்.!!! மிகவும் கஷ்டப்பட்டு, அவளை இரவு பத்து மணிக்கு தூங்க வைத்தாலும், அந்தர் பல்டி அடித்து இரண்டு மூன்று நாட்கள் தொடர வைத்தாலும், இரவு நான்கு மணி நேரம், பகலில் எட்டு மணி நேரம் தூங்கும் பழக்கத்தை மட்டும் மற்ற முடியவில்லை. இந்தியாவில் ஒழுங்காக இரவு பத்து மணிக்கு தூங்கி காலை ஆறு மணிக்கு எந்திரிக்கிறாள். இங்கே ஷார்ஜா வந்தால் மட்டும் இப்படி செய்கிறாள். இவளை பிஸியாக வைக்க என்ன செய்தாலும், இந்த பழக்கம் மட்டும் மாறவே மாட்டேன் என்கிறது. மறுநாள் காலை போஸ்ட் செய்யவேண்டுமென்று ஆரம்பித்த ப்லோக்கிங் இரு நாட்களாக இழுத்துக்கொண்டிருக்கிறது. டிராபிட் இல் சேமித்து திரும்ப எடுத்து டைப் செய்வதில் ஏகப்பட்ட குழப்பம். யாரவது தமிழில் தட்டச்சு செய்ய இதை விட சுலப வழி இருந்தால் சொல்லுங்களேன் பிளீஸ்.

இப்போது இரவு மூன்று மணி. பத்து மணிக்கு படுத்து இரண்டு மணிக்கு எழுந்தாள். ஒரு ஸ்பூனை எடுத்து வாயில் வைத்துக்கொண்டு "அம்மா, பாப்பா மருந்து குடிக்கிறா!!! என்று விளையாடிக் கொண்டிருக்கிறாள். இந்த ஒரு மணி நேரத்தில் இரண்டுவேளை சாப்பிட்டு விட்டேன். எல்லாம் அவள் சமைத்து கொடுத்த செப்பு சாமானில் தான்.!!!! உடற்பயிற்சி செய்ய கூப்பிடுகிறாள். போய்விட்டு அப்புறம் வருகிறேன். பை பை!!!! சி உ!!! டேக் கே !!!! ( நிகழ் பாஷையில் )




No comments: